இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று நோயாளர் எண்ணிக்கை 1 இலட்சம் என்ற உச்ச இலக்கை நெருங்கியுள்ளது.
நேற்று இந்தியாவில் சுமார் 97 ஆயிரத்து 570 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனா்.
புதிய நோயாளர்களுடன் நாட்டில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46 இலட்சத்து 59 ஆயிரத்து 954 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இந்தியாவில் தினசரி புதிய தொற்று நோயாளர்கள் தொகை 95 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களில் 36 இலட்சத்து 24 ஆயிரத்து 196 போ் குணமடைந்துள்ளனர்.
தற்போது பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 இலட்சத்து 58ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணி நேரங்களில் 1,201 பேர் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 77 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது.